Saturday, May 4, 2013

குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம்



குழந்தைகள் மனநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த மிகச்சிறப்பான கருத்தரங்கம் ஒன்றிற்கு திருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் பப்ளிக் ஸ்கூல் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மாண்டிசோரி பயிற்சியகத்தின் இயக்குனர் ஷோபனா வைத்யநாதன், இசைக்கவி ரமணன் ஆகிய இருவரும் உரையாற்ற உள்ளனர். 

நாளை (05-05-2013) காலை 10:30 முதல் மதியம் 1:00 மணிவரை திருப்பூர் வேலன் ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. திருப்பூர் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு: 7373299999 | 7373244099

Thursday, March 28, 2013

மனக்காளான்


* ரமேஷ் வைத்யாயும் இளவெயினியும் மணிக்கணக்கில் போனில் பேசிக்கொள்கிறார்கள்; எதைப் பற்றி பேசுகிறார்களென்றுதான் பிடி கிடைப்பதில்லை.


* வேலைகளில் பிந்தினாலும், ரிப்போர்ட் அனுப்புவதில் முந்துபவனே கார்ப்பரேட் வாழ்வின் செல்லப்பிள்ளை.

* மணிக்கணக்கில் வாசித்தாலும் இணைய தள வாசிப்பு ஒருபோதும் புத்தக வாசிப்புக்கு மாற்றல்ல.

* கடனெனப்பட்டதே இல்வாழ்க்கை.

* ஒன்றைப் பற்றி எழுதவேண்டுமென தீர்மானித்து, யோசித்து மனதிற்குள் தொகுத்து விட்டு, எழுத உட்காருகையில் எனக்கே அது  பழசாகி விடுகிறது.

*  சர்றா...
  காதலிக்கேன்
  காசு தருவேல்ல... - மதுமிதா கவிதைகள்

* டாஸ்மாக் வழங்கும் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி...!'

* அவர் ஒரு வணிகன். நான் ஒரு வணிகன். நீ ஒரு வணிகன். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வணிகத்திற்கு என்ன ஆகப்போகிறது?! - பிரதியங்கார மாசனமுத்து

* முத்து கிருஷ்ணனும், யமுனா ராஜேந்திரனும் சூரத்தாண்டவம் ஆடிய பின் உயிர்மையில் எஞ்சியிருப்பது நல்லி சில்க்ஸ் விளம்பரம் மட்டுமே.

* மூளை தீக்குளிப்பை மடத்தனம் என்றாலும் இதயம் அதனை வீரமென்றே மானசீகமாக தலை வணங்குகிறது.

* ங்கோத்தா..அவன் சங்க அருக்கறேன்டா..சீறியபடி பைக்கில் கிளம்பியவன் தெருமுனையை திரும்புவதற்குள் சரிந்து விழுந்தான். கழுத்தில் மாஞ்சா நூல்!# மீச்சிறு கதை

* பெண்ணுக்குப் பேராசை வைத்தான்... புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் பெரும் ஜவுளிக் கடைகளைத் திறந்தார்...

* வெல்லம் கொள்ளை போகுதே... வாங்கி வந்த நாள் முதல்...
இல்லம் வந்த எறும்புகள்... ஏந்திக் கொண்டு செல்லுதே...


* அக்சுவலா ’ஆனந்த் சார்’ என்கிறவர் யார்?! தொண்டைக்குள் இறங்கி தூர் வாருவாரா...?!

* ’ரைட்டர் மடையன்’ என்றொருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். ’கேட்ச் புடி’ ‘நடு சென்டர்’ மாதிரி வார்த்தைக் கோர்ப்பு இது.

* நீங்க எவ்ளோ ஜிபிக்கு எழுதியிருக்கீங்க... # சமகால தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்களாம்!

* சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதெல்லாம் ஓவர் ஆக்டிங் கூடாது என்பதைத்தான். நடிகை சுஜாதாவைச் சொன்னேன்.

* சேதன் பகத்துக்கு மூக்கு புடைப்பாக இல்லை; இருந்தாலும் எவ்வளவு ஐடியாக்கள் வருகிறது பாருங்கள்?!

* மிஸ்டேக்காக எழுதுவதை சுதந்திரமாகவும் மிஸ்டிக்காக எழுதுவதை தந்திரமாகவும் கொள்வதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் -பிரதியங்கார மாசானமுத்து

* கவிதைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர புலவர் நாஞ்சில் நாடனை சமீபத்திய செய்யுள்களோடு களமிறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

* சரவலென்னவோ சாத்தானுக்கும் கடவுளுக்கும்...
சங்கடமெல்லாம் பக்தனுக்குத்தான்!

* டெக்கான் சார்ஜஸை ஏன் விற்க நேர்ந்தது என்பதை காயத்ரி ரெட்டியின் கிரிக்கெட் ட்வீட்டுகளை வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

* கர்ணன் தன் கவச குண்டலத்துடன் ஜோய் ஆலுக்காஸ் விளம்பர மாடலாகி இருப்பார் #IfMahabharatHappenedNow

* ராமரும், சீதாவும் ஹெஸ்ட் ரோலில் க்ளைமாக்ஸில் அப்பியராகி இருப்பார்கள் #IfMahabharatHappenedNow

* யாரோடும் ஏழைமை பேசேல்...!

* நீ தமிழிலக்கியத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தால், எழுதாமலிரு! - பிரத்தியங்கார மாசானமுத்து

* ஹவுஸ் ஓனரின் டார்ச்சர் தாங்காமல் அவரை கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளனவா?!

* உலக தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு கார்ட்டூன் பாத்திரமும் சேர்ந்து நடிப்பது சரவணன் மீனாட்சியில்தான் # குயிலி

* தமிழ் நாவலொன்றின் ஆங்கிலமொழியாக்கத்தை மெய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறேன்; பெட்டிக்கடை என்பதை பொட்டீக் ஷாப் என பெயர்த்திருக்கிறார்.ம்...ம்...டிவைன்

* சிலர் யோ யோ ஹனிசிங்கின் மண்டை ஹோசிராப்பூர் மேப் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஸ்டைல். அவ்வளவுதான்.

* 'விஷ் யூ எ ஹேப்பி ஹர்த்தால்' - இப்படியொரு மெஸெஜ் கேரள நண்பனிடமிருந்து வந்திருக்கிறது!

* க்ரீன் டீ-ல் நாட்டுச் சர்க்கரையை கொட்டி அரங்கசாமி அலுவலகத்தில் ஒரு திரவம் கொடுக்கிறார்கள்; குடலை சுத்தம் செய்ய இதைவிட வேறு மாற்று இல்லை!

* அம்சவேணிக்கு நல்ல ஆம்சு பவருடா... அசைஞ்சு வருகையில் அவளொரு ஆடி காருடா...

* அழுக்கு சாக்ஸை விட கிழிந்த சாக்ஸ் மேலானது! # ஒரு ட்வீட் தேத்தினேன் பார்த்தீங்களா...?!

* என்னுடைய லட்சியமெல்லாம் இந்தியாவின் முதல் சுமோ மல்யுத்த வீரனாகி நாட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

மனக்காளான்


* ரமேஷ் வைத்யாயும் இளவெயினியும் மணிக்கணக்கில் போனில் பேசிக்கொள்கிறார்கள்; எதைப் பற்றி பேசுகிறார்களென்றுதான் பிடி கிடைப்பதில்லை.


* வேலைகளில் பிந்தினாலும், ரிப்போர்ட் அனுப்புவதில் முந்துபவனே கார்ப்பரேட் வாழ்வின் செல்லப்பிள்ளை.

* மணிக்கணக்கில் வாசித்தாலும் இணைய தள வாசிப்பு ஒருபோதும் புத்தக வாசிப்புக்கு மாற்றல்ல.

* கடனெனப்பட்டதே இல்வாழ்க்கை.

* ஒன்றைப் பற்றி எழுதவேண்டுமென தீர்மானித்து, யோசித்து மனதிற்குள் தொகுத்து விட்டு, எழுத உட்காருகையில் எனக்கே அது  பழசாகி விடுகிறது.

*  சர்றா...
  காதலிக்கேன்
  காசு தருவேல்ல... - மதுமிதா கவிதைகள்

* டாஸ்மாக் வழங்கும் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி...!'

* அவர் ஒரு வணிகன். நான் ஒரு வணிகன். நீ ஒரு வணிகன். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வணிகத்திற்கு என்ன ஆகப்போகிறது?! - பிரதியங்கார மாசனமுத்து

* முத்து கிருஷ்ணனும், யமுனா ராஜேந்திரனும் சூரத்தாண்டவம் ஆடிய பின் உயிர்மையில் எஞ்சியிருப்பது நல்லி சில்க்ஸ் விளம்பரம் மட்டுமே.

* மூளை தீக்குளிப்பை மடத்தனம் என்றாலும் இதயம் அதனை வீரமென்றே மானசீகமாக தலை வணங்குகிறது.

* ங்கோத்தா..அவன் சங்க அருக்கறேன்டா..சீறியபடி பைக்கில் கிளம்பியவன் தெருமுனையை திரும்புவதற்குள் சரிந்து விழுந்தான். கழுத்தில் மாஞ்சா நூல்!# மீச்சிறு கதை

* பெண்ணுக்குப் பேராசை வைத்தான்... புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் பெரும் ஜவுளிக் கடைகளைத் திறந்தார்...

* வெல்லம் கொள்ளை போகுதே... வாங்கி வந்த நாள் முதல்...
இல்லம் வந்த எறும்புகள்... ஏந்திக் கொண்டு செல்லுதே...


* அக்சுவலா ’ஆனந்த் சார்’ என்கிறவர் யார்?! தொண்டைக்குள் இறங்கி தூர் வாருவாரா...?!

* ’ரைட்டர் மடையன்’ என்றொருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். ’கேட்ச் புடி’ ‘நடு சென்டர்’ மாதிரி வார்த்தைக் கோர்ப்பு இது.

* நீங்க எவ்ளோ ஜிபிக்கு எழுதியிருக்கீங்க... # சமகால தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்களாம்!

* சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதெல்லாம் ஓவர் ஆக்டிங் கூடாது என்பதைத்தான். நடிகை சுஜாதாவைச் சொன்னேன்.

* சேதன் பகத்துக்கு மூக்கு புடைப்பாக இல்லை; இருந்தாலும் எவ்வளவு ஐடியாக்கள் வருகிறது பாருங்கள்?!

* மிஸ்டேக்காக எழுதுவதை சுதந்திரமாகவும் மிஸ்டிக்காக எழுதுவதை தந்திரமாகவும் கொள்வதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் -பிரதியங்கார மாசானமுத்து

* கவிதைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர புலவர் நாஞ்சில் நாடனை சமீபத்திய செய்யுள்களோடு களமிறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

* சரவலென்னவோ சாத்தானுக்கும் கடவுளுக்கும்...
சங்கடமெல்லாம் பக்தனுக்குத்தான்!

* டெக்கான் சார்ஜஸை ஏன் விற்க நேர்ந்தது என்பதை காயத்ரி ரெட்டியின் கிரிக்கெட் ட்வீட்டுகளை வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

* கர்ணன் தன் கவச குண்டலத்துடன் ஜோய் ஆலுக்காஸ் விளம்பர மாடலாகி இருப்பார் #IfMahabharatHappenedNow

* ராமரும், சீதாவும் ஹெஸ்ட் ரோலில் க்ளைமாக்ஸில் அப்பியராகி இருப்பார்கள் #IfMahabharatHappenedNow

* யாரோடும் ஏழைமை பேசேல்...!

* நீ தமிழிலக்கியத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தால், எழுதாமலிரு! - பிரத்தியங்கார மாசானமுத்து

* ஹவுஸ் ஓனரின் டார்ச்சர் தாங்காமல் அவரை கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளனவா?!

* உலக தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு கார்ட்டூன் பாத்திரமும் சேர்ந்து நடிப்பது சரவணன் மீனாட்சியில்தான் # குயிலி

* தமிழ் நாவலொன்றின் ஆங்கிலமொழியாக்கத்தை மெய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறேன்; பெட்டிக்கடை என்பதை பொட்டீக் ஷாப் என பெயர்த்திருக்கிறார்.ம்...ம்...டிவைன்

* சிலர் யோ யோ ஹனிசிங்கின் மண்டை ஹோசிராப்பூர் மேப் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஸ்டைல். அவ்வளவுதான்.

* 'விஷ் யூ எ ஹேப்பி ஹர்த்தால்' - இப்படியொரு மெஸெஜ் கேரள நண்பனிடமிருந்து வந்திருக்கிறது!

* க்ரீன் டீ-ல் நாட்டுச் சர்க்கரையை கொட்டி அரங்கசாமி அலுவலகத்தில் ஒரு திரவம் கொடுக்கிறார்கள்; குடலை சுத்தம் செய்ய இதைவிட வேறு மாற்று இல்லை!

* அம்சவேணிக்கு நல்ல ஆம்சு பவருடா... அசைஞ்சு வருகையில் அவளொரு ஆடி காருடா...

* அழுக்கு சாக்ஸை விட கிழிந்த சாக்ஸ் மேலானது! # ஒரு ட்வீட் தேத்தினேன் பார்த்தீங்களா...?!

* என்னுடைய லட்சியமெல்லாம் இந்தியாவின் முதல் சுமோ மல்யுத்த வீரனாகி நாட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

Thursday, December 27, 2012

ஈராறுகால் கொண்டெழும் மந்தி!


* கோட்டிக்காரத்தனமெனினும் மனம் ஒப்பி செய்தால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது!

* உற்றுப் பார்க்காதே... ஒற்றுப்பிழை தெரியும்.

* ஆத்தங்கரை மரமே... அதில் உறங்கும் குரங்கே...# இளவெயினி ராகங்கள்

* ஒரு சிந்தனையாளனாக காலம் தள்ளுவது நீங்கள் நினைக்கிற அளவிற்கு சுலபமானது அல்ல.

* நிர்மலா பெரியசாமிக்கு ஏன் இன்னும் மகாசேசே விருது வழங்கப்படவில்லை?!

* முறுக்கை எண்ணெயில்தானே பொரித்தெடுக்கிறார்கள்; பிறகேன், முறுக்கு 'சுடுகிறேன்' என்கிறார்கள்?!

* எங்கள் வழவில்... கிடக்கும் டயரில்... தங்காமல் நீ ஓடு கொலைகார கொசுவே... டெங்கே அடங்கு... டெங்கே அடங்கு # சங்கே முழங்கு!

* நல்லவனாய் இருப்பதை விடவும், நடிப்பதை விடவும், நல்லவனைப் போல ட்வீட்டுவது கடினமாக இருக்கிறது.

* கேஜ்ரிவாலை ஏதேனும் ஏஜென்ஸி அணுகி விளம்பரப்படங்களுக்கு நடிக்க வைத்தால் செம மைலேஜ் கிடைக்கும் # பிரகலாத் ஹால்கர்/அல்வின் சல்தானா கவனத்திற்கு...

* என் ஓவியங்கள் விற்ற பணத்தில் சல்லி நயாப் பைசா கூட சாரிட்டிக்கு வழங்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்.

* ச்சே..கவிதைன்னா வாசிச்சதும் நாண்டுக்கிட்டுச் சாகலாம்னு தோணனும்கிற எளிய விஷயம் கூட தெரியாத மண்டூகங்களின் மத்தியில் கவிஞனாக வாழ்வது கடினம்.

* பட்டம் விடுவது, மீன் பிடிப்பது, பப்புள்ஸ் விடுவதைப் போலவே ஈகிள் துப்பாக்கியில் ரோல் கேப் வெடிப்பதும் பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீஸாக இருக்கிறது.

* பள்ளி ஞாபகங்களைப் போல நெஞ்சடைக்கச் செய்வது வேறேதுவும் இல்லை.

* மனுஷ்யபுத்திரன் ட்வீட்டரில் இல்லை என்பதே பெரும் ஆறுதலாக இருக்கிறது.

* திரு போனில் யாரிடமோ இரைந்து கொண்டிருந்தாள் 'pizza can be delivered in time, people who wants to be unique can wait for creativity'. வாஸ்தவம்தான்.

* கிறுக்கன்களுக்கு தனி நாடும், ஆயுத பலமும் கிடைத்தால் இப்படித்தான் நடக்கும் # இஸ்ரேல்

* சிலபஸ் நல்லா இருக்கான்னு பார்க்கும்போதே ஸ்கூல் பஸ்ஸூம் நல்லா இருக்கான்னு பாருங்க...

* மசகலி, வசகலி போன்ற கொசுவலை சுடிதார்களால் டெங்கு மட்டுப்பட்டிருக்கிறாவென விசாரிக்க வேண்டும்.

* மனசு நினைக்காததையும் சமயங்கள்ல நாக்கு சொல்லிடும். ஃப்ளோவா வருதுன்னா ஸ்லோவா ஆயிடனும். இல்லன்னா சிக்கல்தான்.

* பூ மலர்வது இரவுக்குத் தெரியும்... கவி மலர்வதை இதயமும் அறியும்.

* பெரும்பாலான நாடோடி கதைகளை கம்போடியா என்பவர்தான் எழுதியிருக்கிறார்.

* ஒருவன் உலகின் ஜனங்களையெல்லாம் ஃபாலோயர்ஸ் ஆக்கிக்கொண்டால், அதனால் அவன் அடையும் லாபம் என்ன?! ஒன்றும் இல்லை. ஆமென்.

* ஒரு மணி நேரமாக வானம் கிழிந்து பெய்கிறது. பன்சிட்டி மாலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன். நல்ல வேளைக்கு கவிஞன் எவனும் அருகில் இல்லை.

* பெத்து எடுத்தவதான் என்னையும் மொத்தி எடுத்துப்புட்டா... # இளவெயினி சோகங்கள்

* கலையால் கைவிடப்பட்ட கண் சோர்ந்த முதுமையில் அய்யோ என்னைக் கவனியுங்கள்..கவனியுங்கள் என கண்ணெதிரே ஒருவன் தேய்ந்தழிவது எத்தனை துயர் மிகுந்தது?

* ஏன் இன்னமும் கோணங்கியின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது?!

* நாகஸ்வரமும், தவிலும் ஒலிபெருக்கி தேவைப்படாத வாத்தியங்கள் என்பதை எப்பத்தாம்யா தெரிஞ்சுக்கப் போறீங்க?!

* நான் பிஸ்கட்டும்,முறுக்கும் போட்டு போஷித்த கருவாயனை நேற்று சின்மயா நகரில் ஒரு செவளையோடு பார்த்தேன்; வீட்டோடு நாயா போயிட்டான் போல!

* இந்த உலகம் என்னைப் பின்தொடர்வது என் உயர் கவித்துவத்திற்காக, தத்துவத்திற்கா,மொழிநடைக்கா அல்லது ஓவியங்களுக்கா?! குழப்பமாக இருக்கிறது.

* நம்பு; இல்லையெனில் வம்பு.

* சாமிக்கே பாக்கெட் பால். பூசாரிக்குப் பண்ணைப் பாலா?!

* இரையாதே; இரையாகாதே!

* தூங்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டு இருக்கணும்; இல்லன்னா 'மண்டய போட்டுட்டான் மடப்பயல்னு' ஸ்டேட்டஸ் போட்ருவானுக! கொள்ளைல போவாணுவோ...!

* ஆடி போனா ஆவணி... தேடிப் போயி சாதி நீ!

* நாட்டு மக்களுக்கென தினமும் ஏதாவது சொல்லாவிட்டால் நமநம என்றிருக்கிறது. தேசத்திற்கு இன்றைய செய்தி ‘உழைத்துயருங்கள்’

* உரிய கிரெடிட் கொடுக்காமல் ஒருவனின் ஐடியாக்களைத் திருடுவது பொன்முட்டையிடும் வாத்தை பொரித்து தின்பதைப் போல.

* பொய் சொன்ன வாய்க்கு போஜனமும் கிடையாது; போண்டாவும் கிடையாது!

* ”எனது பாடலை நதியில் இறக்கி விட்டேன்...அது உன் காலடியை வந்தடையட்டும்”னு கவித்துவமா மெஸெஜ் அடித்தேன்; ரிப்ளை: நதியை மாசுபடுத்தாதே!

* கவிதைகள் கொஞ்சம் ஏப்ப சாப்பையா இருந்தாலும்... அதுக்கு செலக்ட் பண்ற இமேஜஸ்ல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லை.

* சாய்ந்து... சாய்ந்து...சைக்கிள் ஓட்டும்போது... அடடா... ஹேய்ய்ய்ய்....

* கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்தேன் ஒலகத்துல... எங்கம்மா போல டார்ச்சர் கேஸூ எவளும் இல்ல... # இளவெயினி ராகங்கள்

* நீர்ப்பறவையில் லூர்து சாமி, அருளப்ப சாமியென பல சாமிக்கள் வருகிறார்கள். அரங்கசாமியும் வந்திருந்தால், முழுமையான கலைப்படைப்பு ஆகியிருக்கும்.

* ஓரெயொரு ஊரிலே... ஓரெயொரு குட்டிம்மா... குட்டிம்மாக்கு பிடிச்சதெல்லாம் ரெண்டு சட்டி உப்புமா...# கடந்த நிமிடத்தில் இயற்றிய குழந்தை பாடல்.

* புரொபைல் பிக்சர் மாத்துனதும் ஃபர்ஸ்ட் லைக் எவன் போடுறானோ அவன்தான் பாப்பாவோட பாய் ஃப்ரெண்ட் என யூகிக்கலாம்.

* ஜவுளி வாங்கினதுக்கு ஒரு காலண்டர் கொடுத்தான் ஶ்ரீதேவில. 'ஏம்பா...கிங் ஃபிஷர் காலண்டர்லாம் தர மாட்டீங்களா...' திரு என் குமட்டில் குத்தினாள்.

* ஹவுஸ் ஓனர்களின் உளவியல் சித்திரவதைகளுக்குப் பயந்து செய்து கொள்ளும் தற்கொலையே ஹவுஸிங் லோன்!

* காதலை எதிர்ப்பதற்கு முன் அரசியல்வாதிகள் அவரவர் பிள்ளைகள், பேரன், பேத்திகளின் காதல் விவகாரங்களைப் பைசல் செய்துவிட்டு வரவும்.

* நடுவுல கொஞ்சம் ஸ்டெம்ப காணோம் # சேவாக்,சச்சின்

* படத்துக்கு பாட்டே பரவாயில்லையெனும் பொது அபிப்ராயத்தை உருவாக்கி ராஜாவை மீட்டெடுத்த மேனன் என நீ இன்று முதல் புகழப்படுவாய்...! # நீஎபொவ

* அம்பார பாக்குல ஒரு பாக்கு என் பாக்குன்னானாம்...

* ஃபெமினா தமிழ்ப் பதிப்பின் ஓரே குறைபாடு அது தமிழில் இல்லாததுதான்.

* 'எதிர்பாரா விருந்தாளி' எனும் பதமே செல்போனால் ஒழிந்து விட்டது.

* டிசம்பர் 31ம் தேதிக்குள் ஏதாவது கெட்டப் பழக்கமொன்றை கற்றுக்கொண்டாக வேண்டும். இல்லையெனில் ஜனவரி ஒன்றாம் தேதி கையறு நிலையாகிவிடும்.

* விண் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் 'யாதவர்களே... யாதவர்களே...' எழுச்சிப் பாடல், ராஜா சார் இசையமைத்ததா?!

* தூங்காத எலிகள் ரெண்டு... தவறாமல் உதைகள் உண்டு... # இளவெயினி ராகங்கள்

* நண்பர்களே...நெய் மீன் என்பது அசல் நெய்யினால் செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை நீங்கள் இன்றாவது தெரிந்து கொள்ள வேண்டும்...

* சிந்திச்சு பார்த்து... சேனலை மாத்து... சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ... மொக்கை சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ...!

* இந்த கிறிஸ்மஸ்நாளில் எனது ஹார்வர்டு நாட்களை நினைத்துக்கொள்கிறேன்;ரெண்டு செட் ஜூனியரான ஸக்கர்பெர்க் கேக் எடுத்துக்கொண்டுஹாஸ்டலுக்கே வருவான். மெரி கிறிஸ்மஸ்!!!

* அகார்கர், சஞ்ஜெய் பாங்கர், ஜோஹிந்தர், டிண்டா - ஒரே பவுலருக்கு எதற்கு நான்கு பெயர்கள்...?!

* வீட்டு டிவில ரோஹித் சர்மாவை பார்க்கும்போதெல்லாம் சச்சின் கை தட்டி சிரிக்காராம்ல...?!

* அன்சுல் மிஸ்ரா பிறந்த ஊரின் தண்ணீரை என் பிள்ளைக்கு கொடுத்து வளர்க்க ஆசைப்படுகிறேன்.

* புத்தகத்தைக் கொடுத்து உஷார் பண்ண ஒருபோதும் எண்ணாதே! புத்தகம், நட்பு இரண்டையும் இழப்பாய்! - ஜென் குரு மசானமுத்து

* திருவாதிரை நாள் ஒருவாய் களியுண்ண வழியில்லை... பன்னிருகை கோலப்பா... கொண்டாப்பா ஒரு ஜிகர்தண்டா!

(நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிந்தித்து இந்நாட்டு மக்களுக்கு அருளிச்செய்த ட்வீட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வு வளம்பெற... எண்ணியவை ஈடேற... நாள் தவறாமல் பாராயணம் செய்யுங்கள்...!)

சினிமா ரசனை - புத்தக வெளியீடு


சென்னையில் மக்கள் கலை விழா!


Tuesday, December 4, 2012

விஷ்ணுபுரம் விருது 2012... கவிஞர் தேவதேவனுக்கு...

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைக் கவிஞர் தேவதேவனுக்கு அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓர் இலையைக்கொண்டு ஒரு கானகத்தை உருவாக்குகிறேன் என்று தேவதேவன் ஒருமுறை சொன்னார். அவரது மொத்த கவியுலகமும் ஓர் இலை. மானுடனை ஒரு துளிச்சிதறலாக உணரச்செ

ய்யும் பெரும்கானகமொன்றை சுட்டிநிற்கின்றது அது.

தேவதேவனுக்கு இவ்விருதை அளிப்பதில் பெருமைகொள்கிறோம். இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது.
மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக அடுத்த தலைமுறையினர் அளிக்கும் விருது என்பதே இவ்விருதின் சிறப்பு. இந்த விருதை ஒட்டி தேவதேவனைப்பற்றிய நூல் ஒன்றும் வெளியிடப்படும்.

வரும் 22- 120 2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். 23 ஆம் தேதியும் அங்கே தங்கியிருந்தபின் திரும்புகிறார்கள். வழக்கம்போல இது ஒரு வருடாந்தர கல்யாணக் கொண்டாட்டம்.

தேவதேவனுக்காக ஓர் இணையதளம் நம் நண்பர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தேவதேவன் கவிதைகளை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

தொடர்புக்கு arangasamy@gmail.com





நன்றி: ஜெயமோகன்.இன்

Thursday, November 15, 2012

தருணம்




வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு மழை வந்து விடுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
யாராவது வந்து வழி விசாரிக்கிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் தொடர்பு எல்லைக்கு வெளியிலே இருக்கிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு வயிற்றுப்போக்கு பெருக்கெடுத்துவிடுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலரது முதுகில் ஒட்டுப்புல் ஒட்டிக்கொள்கிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு கள்ள சம்போகம் கிட்டுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் பரோட்டா சாப்பிடுகிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் கவிதைகள் எழுதுகிறார்கள்.

(தினகரன் தீபாவளி மலரில் வெளியான கவிதை)

Monday, October 22, 2012

சின்மயி

இவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்கிற முறையில் இணையத்தில் சின்மயி எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார் என்பதை அறிவேன். அந்தந்த தருணங்களில் இந்த சல்லித்தனத்தை கண்டித்தும் வந்திருக்கிறேன். விவகாரம் இந்த அபாய எல்லையை அடைந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் சில முறை இருதரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆணாதிக்க கும்பல் மனோபாவத்தின் முன் எதுவும் எடுபடவில்லை. சின்மயியின் தன்னிலை விளக்கத்தோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன்.

சின்மயி விளக்கம்:

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி#TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் . இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.