
விரையும் மணல் லாரியிலிருந்து சொட்டடிக்கும் நீர் ஆற்றின் குருதியெனக் கொள்க!
நண்பர் ஒரு கனரக வாகனம் வாங்கி இருக்கிறார். பெயர் 'இன்னோவா'வாம்.
என் பெரும்பாலான வஞ்சி புகழ்ச்சியை சம்பந்தப்பட்ட பெண்கள் 'வஞ்சகப் புகழ்ச்சியென' கொள்கின்றனர் # வருத்தம்
முதிர் கன்னிகளை, வாழாவெட்டிகளை, விதவைகளை வெளித் தெரியாமல் புணர்பவன் செத்துச் சொர்க்கம் போவான்.
உலக மொழிகளிலேயே அதிகம் மொன்னைக் கவிதைகள் எழுதப்பட்ட மொழி எனும் பெருமையும் தமிழுக்கு உண்டு # மொழி ஆய்வு
பகைவனுக்கு அருள்வதும் பிழை! மருள்வதும் பிழை!
அறச்சார்பை குத்தகைக்கு விடலாம் என்றிருக்கிறேன். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாலோயர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அரசாங்கம் வரி விதிக்கலாம் # யோசனை
ரொம்பவும் அயோக்கியனை அய்யோக்கியன் என்றெழுதலாம் # தமிழ்க் கொடை
உதித் பாடி ஹிட்டடிக்காத தமிழ்ப் பாடலே இல்லை # ஆய்வு
ஆம்லெட்டைக் கண்டுபிடித்தவன் தான் வாழ்ந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டிருப்பானா என்பதே என் நீண்டகால கவலையாக இருக்கிறது.
ஓடி ஓடி இளைக்கனும். ஊத்தை வயிறைக் குறைக்கனும். ஆடிப்பாடி சிரிக்கனும். ஆஞ்சியோவைத் தவிர்க்கனும் # விழிப்புணர்ச்சி
தானே வளரும் பிரண்டை போன்ற தாவரங்களை நான் ‘தன்செய்’ என அழைக்கலாமென்றிருக்கிறேன். # தமிழ்க் கொடை
அன்பு கலக்காத கலவி. வம்பு வளர்க்காத கிழவி
விதியெனில் விலக்கும், வீதியெனில் விளக்கும் அவசியமாகிறது. பள்ளத்தால் பல் இழக்கப் பார்த்தேன்.
உண்மையான அன்பு பாட்டிலுக்குள் இருக்கும் சாராயம் போல. குடித்தாலன்றி போதையை உணர முடியாது. # தத்துவமுத்து
பென் ட்ரைவ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
அற்பங்களின் மீதான அதீத ஆர்வம் வரலாற்றை வடிவமைத்தது.
குருவை மிஞ்சியாக வேண்டிய நிலை ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அதுவே நியதியும் கூட. குருவை மிஞ்ச முடியாதவர்களின் வாழ்வு சீடனாகவே அஸ்தமித்துப் போய்விடுகிறது. தன்னைத் தாண்டி ஓட முடிகிறவனை வாழ்த்தி வழியனுப்புகிற குருவா நீங்கள்...?!
எழுதுவது என் பொழுதுபோக்கு. எழுத்துக்களை விற்பது என் தொழில். என் பொழுதுபோக்கிற்காகப் பேசப்படுவதை விட தொழில் நேர்த்திக்காகப் பேசப்படுவதையே பெரிதும் விரும்புகிறேன். தவிர, வாரக்கடைசி எழுத்தாளனாக வாழ்வதைக்காட்டிலும் வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். இனிய இரவு.
நண்பர்களே, பார்வர்டு மின்னஞ்சல்களையும், குப்பை குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்புகையில் நாம் கட்டிய நட்பு பாலத்தின் மீது நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்...!
எழுத்தாளத் துடிப்பில் இருப்பவனுக்கு இணையமும், அதன் வாசகர்களும் முக்கியம் என்று நினைத்திருந்தேன். கடந்த ஐந்தாண்டில் எந்த உருப்படியான வேலைகளையும் செய்யாமல் இருந்ததற்கு இணையம் ஒரு பிரதான காரணம்!
சமூக வலைதளங்களின் செயற்பாட்டாளனாய் இருத்தல் யானையை வைத்து பிச்சையெடுத்தலுக்குச் சமம். அதிலும் புறத்தியானுக்காக எடுக்கும் பிச்சை. இணையங்களின் வழியே கடுகளவு அறிவும், மலையளவு காலவிரயமும் நேரிடும் என்பது என் அவதானிப்பு. முதற்கட்டமாக எழுநூற்றிச் சொச்சம் நபர்களோடு நட்பு கொண்டிருந்த ஆர்க்குட்டை அழித்தெறிந்தேன்.
இறைவா, எனக்கு கூடுதலாக எட்டு மணி நேரம் கொடு. அல்லது புறத்தியார் நேரத்தை 16 மணி நேரமாக குறைத்து விடு # கோரிக்கை
முக்கியமானவனாக நடத்தப்பட முக்கியமானவற்றை மட்டும் செய்!